
தொடர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி : விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
நவ 24, 2023
Advertisement
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த பல வருடங்களாகவே உடல்நலமின்றி இருக்கிறார். கடந்த 18ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சிகிச்சை பெற்று வருவதாக விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக விஜயகாந்த் பற்றி தவறான வதந்திகள் பரவி வந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜயகாந்த், காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி மியாட்-ல் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக விஜயகாந்த் பற்றி தவறான வதந்திகள் பரவி வந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜயகாந்த், காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி மியாட்-ல் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!