
பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ்
அப்படி இருந்தும் அவர் ஒரே ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் "பார்த்த ஞாபகம் இல்லையோ". இது அவர் தன் மகனுக்காக இயக்கியது. மகன் ஆனந்த் பாபு சினிமாவில் அறிமுமாகி மளமளவென பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஒரு வெற்றிப் படத்தின் மூலம் அவரை தூக்கி நிறுத்த வேண்டிய கடமை அப்பா நாகேஷிற்கு இருந்தது. அதனால் அவர் முதன் முறையாக இயக்குனராக மாறி இந்த படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ஆனந்த் பாபுவுடன் ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இரட்டை சகோதரிகள் சிறு வயதிலேயே பிரிந்து விடுகிறார்கள். ஒருத்தி பணக்கார வீட்டிலும், இன்னொருத்தி ஏழை வீட்டிலும் வளர்க்கப்படுகிறார்கள். இருவரையும் வைத்து ஆள்மாறாட்ட கதையாக காமெடி கலந்து படம் உருவானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நாகேசும் தொடர்ந்து படம் இயக்கவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!