
எதற்கும் துணிந்தவன் - இரண்டாவது பாடல் வெளியீடு
டிச 27, 2021
Advertisement
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் 5 மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வாடா தம்பி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. உள்ளம் உருகுதே என்ற இரண்டாவது பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. யுகபாரதி எழுதி இந்த பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன் மற்றும் பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!