
12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம்
ஏப் 29, 2025
Advertisement
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் "குற்றம் தவிர்". இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நாயகி ஆராதியா பேசியதாவது: "மதிமாறன்" படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ராவிற்கு நன்றி. நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளியாகவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர், அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.
படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நாயகி ஆராதியா பேசியதாவது: "மதிமாறன்" படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ராவிற்கு நன்றி. நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளியாகவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர், அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!