
கொரோனா 2வது அலை : சோனு சூட் புதிய திட்டம்
ஏப் 20, 2021
Advertisement
கடந்த வருடம் இதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தாக்கம் பரவியபோது, பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த செலவில் பல விதமான உதவிகளை செய்தவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதன்மூலம் ரியல் ஹீரோ என மக்களிடம் பெயர் பெற்ற சோனு சூட், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான போன் அழைப்புகளும் சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளும் வருகிறதாம். அதேசமயம் இந்தமுறை நாடு முழுதும் உள்ள மக்கள் அனைவரும் உதவிக்கு அழைக்கும் விதமாக ஒரு டோல் ப்ரீ நம்பரை ஏற்படுத்தி, ஒரு சிஸ்டம் மூலம் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சோனு சூட். இதன்மூலம் எங்கெங்கே ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் அதிகம் கிடைக்கின்றன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தெரிவித்து உதவி செய்வதுதான் அவரது புதிய திட்டமாம்.
ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான போன் அழைப்புகளும் சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளும் வருகிறதாம். அதேசமயம் இந்தமுறை நாடு முழுதும் உள்ள மக்கள் அனைவரும் உதவிக்கு அழைக்கும் விதமாக ஒரு டோல் ப்ரீ நம்பரை ஏற்படுத்தி, ஒரு சிஸ்டம் மூலம் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சோனு சூட். இதன்மூலம் எங்கெங்கே ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் அதிகம் கிடைக்கின்றன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தெரிவித்து உதவி செய்வதுதான் அவரது புதிய திட்டமாம்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!