
தெலுங்கு இயக்குனர் கிரிஷிற்கு கொரோனா
ஜன 04, 2021
Advertisement
முன்னணி தெலுங்கு இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் வானம் படத்தை இயக்கியவர், தெலுங்கில் வேதம், காஞ்சி, கப்பர்ஸ் பேக், காம்யம் உள்பட பல படங்களை இயக்கியவர். கடைசியாக கங்கனா ரணவத் நடித்த மணிகர்னிகாக படத்தை இயக்கி அதிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் என்.டி.ராமராவின் வரலாற்றை இரண்டு பாகமாக இயக்கினார். தற்போது தலைப்பு வைக்கப்பட்டாத இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஒன்றில் ரவிதேஜாவும், மற்றொன்றில் பவன் கல்யாணும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் கிரிஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரிஷ் இயக்கும் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் கிரிஷிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கிரிஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரிஷ் இயக்கும் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் கிரிஷிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!