
தவித்துக் கொண்டிருக்கும் சினிமா ரசிகர்கள்
ஆனால், இந்த வருடத்திய ஊரடங்கில் அவர்களால் புதிய படங்களைப் பார்க்க முடியவில்லை. வேறு மொழிகளில் வந்து சில படங்களை மட்டும் ஓடிடி தளங்களில் தீவிர சினிமா ரசிகர்கள் சிலர் பார்த்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களை இந்த வருடம் ஓடிடி தளங்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த இரண்டாவது அலையின் தாக்கம் திடீரென வந்ததால் அவர்களால் சுதாரித்துக் கொள்ளவும் வாய்ப்பில்லை. இப்போதுதான் பல நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அவை முடிந்து ஒப்பந்தம் போட்டு, அதன்பின்தான் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும்.
எப்படியும் ஜுன் மாதத்தில் சில புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக ஜுன் மாதம் வரையில் தான் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படியே இருந்தாலும் தியேட்டர்களைத் திறக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் புதிய படங்களை வெளியிட்டால்தான் ஓடிடி தளங்களும் தாக்குப் பிடிக்க முடியும் என்பது உண்மை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!