
மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ்
ஏப் 24, 2024
Advertisement
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் படிக்க வைத்த பல மாணவர்கள் தற்போது சம்பாதிக்க தொடங்கி இருப்பதை தொடர்ந்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவை மையத்தை மே 1ம் தேதி முதல் தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், நான் உதவி செய்த மாணவர்கள் இப்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதனால் எதிர்காலத்தில் நான் செய்துவரும் இந்த சேவையானது மாற்றம் என்ற இந்த சேவை மையத்தின் மூலம் இன்னும் பெரிய அளவில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவை மையத்தை மே 1ம் தேதி முதல் தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், நான் உதவி செய்த மாணவர்கள் இப்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதனால் எதிர்காலத்தில் நான் செய்துவரும் இந்த சேவையானது மாற்றம் என்ற இந்த சேவை மையத்தின் மூலம் இன்னும் பெரிய அளவில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!