
போட் பட அப்பேட்
படத்தை பற்றி சில அப்பேட் வருமாறு: இந்த படம் ஒரு சர்வைவல் த்ரில்லர் வகை படம். 1940களில் ஜப்பான் சென்னையை குண்டுவீசித் தாக்கிய காலகட்டம். சென்னை மீது எம்டன் குண்டு வீசப்பட்ட நேரம்... அப்போது சென்னையை சேர்ந்த 10பேர் ஒரு சிறிய படகில் கடலுக்குள் தப்பிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக, படகு நடுக்கடலில் நிற்கிறது. படகில் ஓட்டை விழுந்து மூழ்க தொடங்குகிறது. ஒரு கொலைகார சுறா ஒன்று படகை சுற்றி சுற்றி வருகிறது. இந்த சிக்கலில் இருந்து அந்த 10 பேரின் தலைவரான யோகி பாபு மற்றவர்களை தனது புத்தி சாதுர்யத்தால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
நெல்லை மாவட்டம் குலசேகரபட்டின கடலில் 5 மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்தது. கடலின் நடுப்பகுதியில் ஒரு படகில் நடிகர்கள் நடிக்க சுற்றிலும் 7 படகுகளில் படப்பிடிப்பு குழுவினர் அமர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அலையின் எழுச்சி காரணமாக ஒரு வாரம் வரை படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை யோகி பாபு கடலில் தவறி விழுந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!