
அண்ணாத்த: அவசர அவசரமாக முடிக்கப்படும் ரஜினி போர்ஷன்
இன்னும் 30 சதவிகித படப்பிடிப்பே பாக்கி உள்ள நிலையில் 3ம் கட்டமாக சமீபத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜனி தனி விமானத்தில் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தற்போது கொரோனாவின் இரண்டாது அலை காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் மாதக் கணக்கில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை உள்ளது.
இதனால் தற்போது ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அவசர அவசரமாக படமாக்கி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. சில காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட வேண்டியது இருப்பதால் அதற்காக தெலுங்கானா மாநில அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். அது கிடைத்துவிட்டால் ரஜினி போர்ஷனை முடித்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.
மற்ற காட்சிகளை மேலும் இரண்டு வாரங்களில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!