
நடிகர் மோகன் சர்மாவுக்கு கொலை மிரட்டல் : போலீசில் புகார்
மோகன் சர்மா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஒரு நாள் நான் வெளியில் போக எனது காரை எடுத்தேன். அப்போது மர்ம நபர் ஒருவர், எனது வீட்டு முன்பு காரை நிறுத்திக்கொண்டு எடுக்க மறுத்தார். காரை எடுக்கச் சொன்னபோது, அந்த நபர் என்னிடம் சண்டை போட்டார். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இரும்பு கம்பியால் என்னை தாக்க முற்பட்டார். அவர் மீது சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!