
தேர்தல் போட்டியில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான்
ஆனால் இந்தமுறை சட்டசபை தேர்தலில் அவருக்கு நாம் தமிழர் கட்சியில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், திடீரென, வரும் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என கூறி உள்ளார் மன்சூர் அலிகான்..
“தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் தான் புதிய கட்சி ஒன்றை துவங்கி தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக, வேட்பு மனு தாக்கல் செய்தேன். தற்போது பிரச்சாரமும் செய்து வருகிறேன். ஆனால் நான் பிரச்சாரத்துக்கு செல்லுமிடம் எல்லாம், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள், எந்த கட்சி ஓட்டுக்களை பிரிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்பது போலவே பத்துக்கு எட்டு பேர் என்னிடம் கேட்கிறார்கள். இது என் மனதுக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது. அதனால் இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டேன்” என விரக்தியுடன் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!