
சூடுபிடிக்கும் கொலை சதி வழக்கு : திலீப்பின் நண்பர் கைது
மே 18, 2022
Advertisement
மலையாள முன்னணி நடிகரான திலீப், பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். அதன்பிறகு நடிகை கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டார் என்றும், இதற்காக அவர் ஜாமீனில் விடுதலையானதும் ஒரு முக்கிய நபரை சந்தித்து திட்டம் தீட்டினார் என்றும் மலையாள இயக்குனர் பாலசந்திரகுமார் புகார் அளித்தார்.
இதனால் நடிகை கடத்தல் வழக்குடன் திலீப் மீது கொலை சதிதிட்ட வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் பாலசந்திரகுமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திலீப்பின் நண்பரும், நட்சத்திர ஓட்டல் அதிபருமான சரத்நாயரை போலீசார் கைது செய்தனர். சரத்நாயரும், திலீப்பும் சேர்ந்த கொலை சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை பாலசந்திரகுமார் போலீசிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொலை சதி வழக்கு தீவிரமடைந்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், தற்போதைய மனைவி காவ்யா மாதவன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் திலீப் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதனால் நடிகை கடத்தல் வழக்குடன் திலீப் மீது கொலை சதிதிட்ட வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் பாலசந்திரகுமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திலீப்பின் நண்பரும், நட்சத்திர ஓட்டல் அதிபருமான சரத்நாயரை போலீசார் கைது செய்தனர். சரத்நாயரும், திலீப்பும் சேர்ந்த கொலை சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை பாலசந்திரகுமார் போலீசிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொலை சதி வழக்கு தீவிரமடைந்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், தற்போதைய மனைவி காவ்யா மாதவன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் திலீப் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!