
தி பேமிலி மேன் 2வில் அரசியல் இல்லை: மனோஜ் பாஜ்பாய் விளக்கம்
இலங்கை தமிழர்களையும், அங்கு நடந்த போராட்டத்தை இந்த தொடர் தவறாக சித்தரிப்பதாக கூறப்பட்டது. இதற்கு இயக்குனர்களும், நடிகை சமந்தாவும் விளக்கம் அளித்து விட்டார்கள். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் திவாரி கேரக்டரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறோம். யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. முதல் சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி நாங்கள் அரசியல் குறித்துப் பேசவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய மனிதத்தன்மையுடன் அணுகி உள்ளோம்.
ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுடைய சொந்தக் கதையில் ஹீரோதான். இப்போது இத்தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை என்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் உணர்கிறீர்கள். அது உங்களைப் பற்றியும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மிகவும் மரியாதையான வகையில் அன்புடன் பேசுகிறது.
இவ்வாறு மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!