
சல்மான்கான் விமர்சன சர்ச்சை ; பதறிய கோவிந்தா
இந்தநிலையில் கமால் கான், “உங்கள் ஆதரவுக்கு நன்றி கோவிந்தா” என கூறி ஒரு வெளியிட்டுள்ள டுவீட் ஒன்று, பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்மான்கான் சர்ச்சையில் இந்த கமால் கானுக்கு ஆதரவாக கோவிந்தா இருக்கிறாரோ என்பது போன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
இதனால் பதறிப்போன கோவிந்தா, “நான் கமால் கானுடனான தொடர்பை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. அது வேறு யாராவது அவருடைய நண்பரான கோவிந்தாவாக இருக்கலாம். அதனால் சல்மான்கான் சர்ச்சையில் என்னை தொடர்பு படுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் கோவிந்தாவையும் கிண்டலடிக்கும் வகையில், “நிஜம் தான்.. அது நீங்கள் இல்லை கோவிந்தா ஜி. என்னுடைய நண்பர் கோவிந்தா பற்றித்தான் நான் கூறியிருந்தேன்” என கூறியுள்ளார் கமால் கான்.. எப்படியோ சல்மான்கான் விவகாரத்தில் தான் சிக்கவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் கோவிந்தா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!