
2000 கடிதங்கள் மற்றும் டைரிகளின் அடிப்படையில் உருவாகும் மீனா குமாரியின் பயோபிக்
1939-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா குமாரி, 1946-இல் "பச்சன் கா கேல்" என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1972 வரை கிட்டத்தட்ட 100 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். அவருக்கும் இயக்குனர் கமல் அம்ரோகிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு, பின்னர் 12 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்தனர்.
இந்த நிலையில், தற்போது உருவாகவிருக்கும் அவரது பயோபிக் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சுமார் 2000-க்கும் மேற்பட்ட அவரது கடிதங்கள் மற்றும் அவரது டைரிகளை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மீனாகுமாரியின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைத்துறையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் இயக்குனர் கமல் அம்ரோகியுடன் அவரது உறவு ஆகியவை இந்தப் படத்தில் சொல்லப்பட இருக்கின்றன. இதில் மீனா குமாரி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!