
கிர்த்தி சனோன், ராஷ்மிகாவால் அப்செட்டில் இருக்கிறாரா ஷாகித் கபூர்? : நடிகை பதிவால் சலசலப்பு
இந்த நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது கதாபாத்திரம் கொஞ்ச நேரமே இடம்பெறும் விதமாக இருப்பதாகவும் ஷாகித் கபூர் அப்செட்டில் இருக்கிறார் என்று ஒரு செய்தி வெளியானது.
ரசிகர்கள் இதை சாதாரணமாக கடந்து போய் இருப்பார்கள். ஆனால் பிரபல நடிகை பிபாஷா பாசு இந்த செய்தியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரிப்போர்ட் செய்து உள்ளார். இவர் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதாலேயே அவரால் பகிரப்பட்ட இந்த செய்தி நெட்டிசன்களிடம் கவனம் பெற்று வைரலாக பரவியது. இது குறித்து படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் ஏதேனும் விளக்கம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!