
பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம்
தீபிகா கூறுகையில், சில படங்களில் நடிக்க பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லியும் நான் மறுத்து விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை சம்பளம் மட்டுமே முக்கியம் இல்லை. எனக்கான ரோல் அழுத்தமாக இருக்க வேண்டும். கமர்சியலாக இருந்தாலும் அது பெரிய ரோலாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக அந்த கதையை சொல்லும் இயக்குனர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டுதான் ஒரு படத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பெரிய சம்பளத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு எந்த படத்தையும் நான் ஏற்பதில்லை என்று கூறி இருக்கும் தீபிகா படுகோனே, சிலர் சமூகத்துக்கு மெசேஜ் சொல்வதாக என்னிடத்தில் வருகிறார்கள். ஆனால் அப்படி அந்த இயக்குனர்கள் சொல்லக்கூடிய மெசேஜ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதையும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன். அதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அந்த படங்களை ஏற்கிறேன். இல்லாதபட்சத்தில் அந்த படங்களை தவிர்க்கிறேன். இதனால் என் மீது விமர்சனங்கள் எழுதுகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!