
ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி
கஜோல் நடித்து வெளியாக உள்ள "மா" படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு இருந்தால் ஒரு விதமான சங்கடம் இருக்கும். ஒரு விதமான பய உணர்வு வரும். அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறத் தூண்டும். சில இடங்களில் அப்படியான எண்ணம் வரும். மீண்டும் அங்கு வரக் கூடாது என்று நினைப்போம். அது போலத்தான் எனக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் உணர்வு வரும். உலகத்திலேயே மிகவும் பயமான ஒரு இடம் அது,” என்று கூறியுள்ளார்.
கஜோல் நடித்துள்ள "மா" படம் ஒரு பேய்ப் படம், அடுத்த வாரம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. "பேய்" பற்றிய ஒரு பய உணர்வு ராமோஜி பிலிம் சிட்டியில் இருக்கும் என்ற அர்த்தத்தில்தான் கஜோல் பேசியுள்ளார். ஆனால், அப்படி என்ன ஒரு அனுபவத்தை அங்கு பெற்றார் என்பது குறித்து அவர் விளக்கமாகச் சொல்லவில்லை.
இந்த பேச்சு தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!