
பூத் பங்களாவுக்காக 14 வருடம் கழித்து பிரியதர்ஷனுடன் இணையும் அக்ஷய் குமார்
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நுழையும் அவர் மீண்டும் அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அக்ஷய் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு "பூத் பங்களா" என டைட்டில் வைக்கப்பட்டு இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 வருடங்கள் கழித்து இயக்குனர் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பதற்கு தான் ஆவலாக இருப்பதாக அக்ஷய் குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே "பாஹம் பாக் ஹேரா பெரி, கரம் மசாலா" என பிரியதர்ஷனுடன் இணைந்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அக்ஷய் குமார், கடந்த 2010ல் அவரது இயக்கத்தில் "கட்டா மீத்தா" என்கிற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போதைய இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த பூத் பங்களா திரைப்படம் ஒரு ஹாரர் பேண்டஸி திரில்லராக உருவாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!