
கங்கனா படத்திற்கு தடை கேட்டு வழக்கு
இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வருகிற செப்டம்பர் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரமோசன் பணிகளில் கங்கனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் "படத்தில் சீக்கிய சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்திருந்தால் இந்திராவிகு ஏற்பட்ட முடிவுதான் உங்களுக்கும் ஏற்படும்" என்று சில சீக்கிய இளைஞர்கள் வீடியோ மூலம் கங்கனாவுக்கு கொலை மிரட்டல் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் "எமெர்ஜென்சி" படத்தை தடை செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் சீக்கிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. "சீக்கியர்களுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், படம் வெளியானால் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்து அமைதி கெட்டு விடும் என்றும் சர்ச்சை காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!