
‛டிராவல் ஏஜென்ட் படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா
பஞ்சாபைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்வோர் பெற்றோரையும், குடும்பத்தையும், விவசாயத்தையும் விட்டுவிட்டு வெளியூர் சென்று உழைக்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் நாட்டில் தங்கி பெற்றோருக்கு சேவை செய்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்தை இப்படம் பேச இருக்கிறது.
இந்த படத்தின் துவக்க விழாவை மூத்த நடிகர் தர்மேந்திரா கிளாப் அடித்து துவக்கி வைத்ததோடு, சோனு பகத்தின் சினிமா பயணத்திற்கும் தனது வாழ்த்தை தெரிவித்தார். தர்மேந்திராவின் உறவினர் சோனு. இதுபற்றி தர்மேந்திரா கூறுகையில், ‛‛சோனு பகத்தின் முதல் படத்திற்காக ஆசிர்வதிக்க வந்துள்ளேன். சோனு திறமையானவர் . பஞ்சாபி படங்களில் அவர் அறிமுகமாகிறார். இதில் எனக்கான கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் நடைபெறவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!