
ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு மிக உயர்ந்த விருதாக வழங்கப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கே பாலசந்தர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், லதா மங்கேஷ்கர், கே விஸ்வநாத் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் இந்த விருதை வென்றுள்ளனர். இந்தாண்டுக்கான விருது வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் வஹீதா ரஹ்மான். 1960, 70களில் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற மொழிகளில் நடித்துள்ள வஹீதா, தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபுவும் 40 திருடர்கள் படத்திலும் நடித்தார். கடைசியாக கமலின் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வஹீதா ரஹ்மானுக்கு இந்தாண்டுக்கான புகழ்மிக்க "தாதா சாகேப் பால்கே" வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!