
கடார் 2 வெற்றியை தொடர்ந்து அப்னே 2ம் பாகத்திற்கு தயாராகும் சன்னி தியோல்
இந்த நிலையில் அடுத்ததாக 2007ல் தான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற அப்னே படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் சன்னி தியோல். இதன் முதல் பாகத்தை கடார் 2 பட இயக்குனர் அனில் சர்மா தான் இயக்கி இருந்தார் என்பதால் தற்போது கடார் 2 வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்தையும் அவரை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாவது குறித்து சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ள சன்னி தியோல், “கடார் 2 வெளியாவதற்கு முன்பாக இந்த அப்னே படத்தின் இரண்டாம் பாகத்தில் எனக்கு அம்மாவாக நடிக்க பல நடிகைகளை கேட்டபோது தயங்கினார்கள். ஆனால் தற்போது கடார் 2 படத்தின் வெற்றியால் பலரும் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு எனக்கு அம்மாவாக நடிக்க முன் வந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!