
கூமர் படத்தை பாராட்டி புரமோட் பண்ணும் வீரேந்திர சேவாக்
படம் வெளியானதில் இருந்தே பாசிட்டி விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான வீரேந்திர சேவக் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். “கிரிக்கெட்டை பற்றிய படங்கள் ரொம்பவே குறைவாகத்தான் வருகின்றன. அதனால் தான் இந்த படம் வெளியானதும் உடனடியாக பார்த்து விட்டேன். பொதுவாக நான் ஸ்பின்னர்களை பெரிதாக மதிப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் நாயகி ஸ்பின் பால் போடும்போது வியந்து போனேன்.
அதேபோல பயிற்சியின் போது கோச் சொல்லிக் கொடுப்பதையும் நான் பெரிதாக கவனிக்க மாட்டேன். ஆனால் இந்த படத்தில் ஒரு கோச்சாக தன் பக்கம் கவனத்தை திருப்பும்படி செய்துள்ளார் அபிஷேக் பச்சன். கிரிக்கெட் விரும்பிகள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இவரது பாராட்டுக்கு அபிஷேக் பச்சன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!