
இளம் பாலிவுட் நடிகர் மர்ம மரணம்
மே 23, 2023
Advertisement
வேகமாக வளர்ந்து வந்த இளம் பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங். ஆதிகிங், மாம் அண்ட் டாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 33 வயதான ஆதித்யா சிங் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் வசித்து வந்தார். நேற்று மதியம் அவரை தேடி நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே அவர் மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது குளியல் அறையில் ஆதித்யா சிங் மயங்கி கிடந்தார் . உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அதித்யா சிங் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாகவும அதன் காரணமாக அவர் மரணம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது குளியல் அறையில் ஆதித்யா சிங் மயங்கி கிடந்தார் . உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அதித்யா சிங் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாகவும அதன் காரணமாக அவர் மரணம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!