
நான் நலமாக உள்ளேன் - சஞ்சய்தத்
இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் நடந்து வருகிறது. இதில் துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்தார். இந்த சண்டை காட்சியின் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் எதிர்பாராதவிதமாக டம்மி குண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சஞ்சய்தத்திற்கு காயம் ஏற்பட்டதாகவும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதை சஞ்சய் தத் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை உண்மையல்ல. கடவுள் அருளால் நான் நலமாக உள்ளேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!