
ராம நவமிக்கு வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்; தயாரிப்பாளர் இயக்குனர் மீது புகார்
இதுகுறித்து ராமாயண காவியத்தை களங்கப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து, சமீபத்தில் ஆதிபுருஷ் படக்குழுவினர் தேவையான மாற்றங்களை செய்வதாக கூறிய பிறகு தான் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் ராமநவமியை முன்னிட்டு ஆதி புருஷ் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. தற்போது மும்பையைச் சேர்ந்த சஞ்சய் திவாரி என்பவர் இந்த போஸ்டர் குறித்து மும்பையில் உள்ள சகினகா காவல் நிலையத்தில் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆசிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் மூலமாக புகார் அளித்துள்ளார்.
இந்த போஸ்டர் ராமன் மற்றும் அனுமன் ஆகியோரை தவறான உருவத்தோற்றத்தில் சித்தரிப்பதாக கூறி இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. இந்த படம் வெளி வருவதற்கு முன்பாகவே இவ்வளவு புகார்களையும் பிரச்னைகளையும் சந்தித்து வரும் நிலையில் படம் வெளியானால் இன்னும் என்னென்ன பிரச்னைகள் எல்லாம் வருமோ என படக்குழுவினர் கவலையில் இருக்கின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!