
சன்னி லியோனுக்கு 3 நாள் கெடு வைத்த உ.பி அமைச்சர்
இதையடுத்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ராவும் சன்னி லியோனின் பாடலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி ஒரு பாடலை ஆடியதற்காக சன்னிலியோன் உள்பட அந்த ஆல்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். முக்கியமாக மூன்று நாட்களுக்குள் அந்த ஆல்பத்தில் இருந்து சன்னி லியோனின் அந்த பாடலை நீக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார் . அப்படி இல்லை என்றால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
அவரது இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மதுபான் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை அடுத்த மூன்று நாட்களுக்குள் மாற்றுவதாக அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், மதுபான் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாகவும் இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த பாட்டின் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம். பழைய பாட்டுக்கு பதிலாக புதிய பாடல் அமைத்து மூன்று நாட்களில் வெளியிட இருக்கிறோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!