
மகன் ரிலீஸ்… மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் ஷாரூக் கான்
தற்போது அவரது மகன் சிறையில் இருந்து வந்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே வழக்கமான பணிகளில் ஈடுபட ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். தனது மகனையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார். தான் செய்யவிருக்கும் வேலைகள் குறித்து திட்டமிடத் தெடங்கியிருக்கிறார். வரும் 15ம் தேதி ஷாருக்கான் மும்பையில் நடக்கும் பதான் படத்தின் படப்பிடிப்புகளில் பங்கேற்க இருக்கிறார். அவருடன் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோரும் படப்பிடிப்புகளில் பங்கேற்க இருப்பதாக பதான் படவேலையில் ஈடுபட்டுள்ள உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த படப்பிடிப்பு 15 முதல் 20 நாட்கள் நடக்கும் என்றும் தெரிகிறது.
இந்த படத்துக்கு பின் அட்லீ இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதி கொடுத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!