
அவதூறு கருத்து: பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி கைது
அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். யுவிகா சவுத்ரி தனது டுவிட்டர் பதிவில், நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து பரப்பப்பட்டுள்ளது யாருடைய மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு உள்ளது. என்று தெரிவித்தார்.
என்றாலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹன்சி போலீசார் நேற்று யுவிகா சவுத்ரியை திடீரென கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மாலையில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!