
சிங்கம் அகெய்ன் படப்பிடிப்பை தொடங்கிய ரோஹித் ஷெட்டி
இந்த நிலையில் தற்போது மீண்டும் சிங்கம் அகெய்ன் என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி. இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். ரோஹித் ஷெட்டியின் ஆஸ்தான நடிகரான ரன்வீர் சிங்கும் இந்த பூஜையில் கலந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இவரும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ என்றும் ஒரு யூகத்தை கிளப்பி உள்ளது.
இந்த படம் பற்றி ரோஹித் ஷெட்டி கூறும்போது, “பத்து வருடங்களுக்கு முன்பு சிங்கம் படத்தை எடுத்தபோது அதைத் தொடர்ந்து சிங்கம் ரிட்டன்ஸ், சிம்பா, சூர்யவன்சி என தொடர்ந்து போலீஸ் படங்களாகவே எடுப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போது அதன் தொடர்ச்சியாக இந்த சிங்கம் அகெய்ன் படம் துவங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!