
திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான்
சைப் அலிகான் கூறுகையில், ‛‛திருட்டு தொடர்பான படத்தில் திருடனாக நடித்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால் இதில் எனது கேரக்டர் சவால்கள் நிறைந்தது. அவனுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. சாகசக்காரனாகவும், குடும்ப தலைவனாகவும் நடித்துள்ளேன். ஹீரோவை இந்த மாதிரி வேடத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இதுபோன்ற வாய்ப்புகள் எப்பவும் வராது. துப்பாக்கிகளுடன் கூடிய மாபியா டான்கள், சிவப்பு வைரங்களின் உலகம், அருங்காட்சியங்களை கொள்ளை அடிப்பது என சாகசமும், அதிரடியும் நிரம்பி இருக்கும். படத்தில் எனது ரெஹானின் கதாபாத்திரம் அருமையானது. படப்பிடிப்பு தளத்திலும் மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!