
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். திலீப் குமாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திலீப் குமார், இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994ல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!