விமர்சனம்
-------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
பங்காளிக்குள் பஞ்சாயத்து சம்பந்தமாய் ஒரு பஞ்சாயத்து! இந்த வீட்டுப் பையனும், அந்த வீட்டுப் பெண்ணும் காதல் கல்யாணம் பண்ணி, வீட்டாரால் துரத்தப்பட்டு, சென்னை வருகிறார்கள். அவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா? என்பதுதான் (நளன்-தமயந்தி காலத்துக்) கதை! இயக்கம் வெங்கடேசன்.
புதுமுகம் மைக்கேல் துருதுருவென்று இருக்கிறார்.
நந்திதா தனக்கு நடிக்க வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய, வாழ்க்கை இனி என்ன ஆகும் என்ற நிலையில் ஆறுதல் தரும் காட்சி நைஸ். (காதலிக்கும் போது குறும்புத்தனம் செஞ்சா ரசிக்கலாம். ஆனால் வாழ்க்கைன்னு வந்துட்டா சீரியஸ்னஸ் வேணும்!)
சினிமாவே வேண்டாம் என்று ஐ.டி. வேலைக்குப் போகும்போது, அங்கே டைரக்டர் சான்ஸ் கிடைப்பது எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
சூரியை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக்கிவிட்டார்கள். குழந்தைக்கு 50 ரூபாய் கொடுத்துவிட்டு கண் கலங்கும்போது மட்டும் அட!
பத்து நிமிடமே வந்தாலும் சாம்ஸ் புன்னகைக்க வைக்கிறார்.
இசையில் மண்வாசனை.
நளனும் நந்தினியும் - கொஞ்சம் பாங்கு. கொஞ்சம் போங்கு!
குமுதம் ரேட்டிங் - ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!