டைரி,Diary

டைரி - வீடியோ ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்
இயக்கம் - இன்னாசி பாண்டியன்
நடிப்பு - அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து
வெளியான தேதி - 26 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி 13 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

வித்தியாசமான ஒரு கதையை யோசித்துவிடலாம். ஆனால், அந்தக் கதையை ரசிக்கும் விதத்தில் கொடுக்கும் 'மந்திரம்' திரைக்கதையில்தான் இருக்கிறது. மையப் புள்ளியிலிருந்து விலகாத, அதைச் சுற்றிய திரைக்கதைதான் ஒரு படத்தை மேலும் சுவாரசியமாக்கும்.

இந்தப் படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் கதையை மட்டும் வித்தியாசமாக யோசித்துவிட்டு திரைக்கதையில் தடம் புரண்டுவிட்டார். கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே ரசிக்கும் விதமாக இருக்கிறது. படம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் அங்கும் முடிக்காமல் இன்னமும் நீட்டித்துப் போகிறார். முதல் படத்தில் முத்திரை பதிக்க வேண்டுமென என்னென்னமோ சொல்லி, எங்கெங்கோ இழுத்துச் செல்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பவர் அருள்நிதி. ஆவணக் காப்பகத்திலிருந்து முடிக்க முடியாத கேஸ்களில் ஒன்றை எடுத்து பயிற்சி பெறுபவர் விசாரிக்கலாம் எனச் சொல்கிறார் மேலதிகாரி. கண்ணை மூடிக் கொண்டு ஒரு கேஸைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த கொள்ளை, கொலை வழக்கு அது. அங்கு சென்று தன் விசாரணையை ஆரம்பிக்கிறார். ஒரு வழக்கை விசாரிக்கப் போய் மேலும் சில பல மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவை என்ன என்பதுதான் இந்த 'டைரி'.

தனக்கான கதைகளைத் தேர்வு செய்வதில் அருள்நிதி தனி கவனம் செலுத்துவார் என்று பெயர் வாங்கியுள்ளார். இந்தப் படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்திருப்பார். ஆனால், இடைவேளை வரை அருள்நிதிக்கு திரைக்கதையில் ஒரு சில காட்சிகளை மட்டுமே வைத்து ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எழுதிய டைரியை அருள்நிதி முழுதாகப் படித்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அவருக்கான முக்கியமான பக்கங்கள் இல்லவே இல்லை. இடைவேளைக்குப் பிறகுதான் அருள்நிதி களத்தில் இறங்குகிறார். போலீஸ் கதாபாத்திரங்களில் 'பிட்' ஆக நடித்துப் பழகிவிட்டார். இந்தப் படத்திலும் அப்படியே.

அருள்நிதிக்கு ஜோடி என்பதால் படத்தின் கதாநாயகியாக பவித்ரா மாரிமுத்துவைச் சொல்லலாம். ஊட்டி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் பவித்ரா. இவரைப் பார்த்த உடனேயே அருள்நிதிக்குக் காதல் வந்துவிடுகிறதாம்.

படத்தில் ஊட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு நள்ளிரவில் புறப்படும் ஒரு பேருந்து தான் முக்கிய கதைக்களம். அதில்தான் அதிக காட்சிகள் நடக்கிறது. அப்பேருந்து பயணிகளாக சிலர் நடித்துள்ளார்கள். அவர்களில் ஷாராக்கு மட்டும் அதிக வசனம், அதுவும் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி நெளிய வைக்கிறார். சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் படத்தில் உண்டு. மீதிப் பேர் நமக்கு அதிகம் தெரியாத முகங்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹான் இருவரும் படத்தை எப்படியாவது தரம் உயர்த்திக் காட்டிவிட வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பம் நன்றாகத்தான் ஆரம்பிக்கிறது. ஊட்டிக்குச் சென்ற பின் அருள்நிதி விசாரணையை ஆரம்பித்தவுடன் வேறு கோணத்தில் படம் செல்லும் என்று எதிர்பார்த்தால் ஊட்டி கொண்டை ஊசி வளைவு போல படம் சுற்றிச் சுற்றி போகிறது. படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம், கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கிறது. அது மட்டும் நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று. இதுவரை வந்த தமிழ் சினிமாவில் அப்படி ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்திருக்க மாட்டோம். அந்த திருப்புமுனை போலவே முழு படத்தையும் யோசித்திருந்தால் 'டைரி' நீங்கா நினைவைத் தந்திருக்கும்.

டைரி - சரியாக எழுதப்படாமல்…

 

டைரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டைரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓