இரண்டு கமர்ஷியல் படங்களை தொடர்ந்து நானி நடித்திருக்கும் த்ரில்லர் படம் தான் ஜென்டில்மேன். இந்த படத்தை மோகன கிருஷ்ணா இயக்கியுள்ளார். இரண்டு பெண்கள் ஒரு விமான பயணத்தில் சந்தித்து கொள்கிறார்கள். நிவேதா தாமஸ் மற்றும் சுரபி பின்பு பேசி பழகி தங்கள் சொந்த வாழ்க்கையயும் பகிர்ந்து கொள்கிறார்கள். பேச்சு அவர்களின் காதலன்களை பற்றியும் செல்கிறது எல்லாம் பேசி முடித்து நல்ல முறையில் பயணமும் முடிவடைகிறது.
நிவேதாவின் காதலன் பார்ப்பதற்கு மிகச்சரியாக சுரபியின் காதலன் போலவே இருக்கிறார் (நானி). மிகுந்த குழப்பத்துடன் வீடு திரும்பும் நிவேதாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியான் செய்தி காத்திருக்கிறது. அது அவரின் காதலன் ஒரு கொடூரமான கார் விபத்தில் இறந்துவிட்டான் என்பதே. நானியை சந்தேகப்படும் நிவேதா விசாரிக்க துவங்குகிறார். சுரபியின் உண்மையான காதலன் யார்? இந்த குழபப்பத்திற்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதே மீதிக்கதை.
மொத்தமாக நானியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் கமர்ஷியல் படங்களின் நடுவே இதுபோல் ஒரு த்ரில்லர் கதையை தேர்ந்தெடுத்ததற்கு தன் கதாபாத்திரம் உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். நிவேதா தாமஸை சுற்றித் தான் மொத்த கதையும் நடக்கிறது. நானியின் கதாபாத்திரம் இறுதிவரை படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்து கொள்கிறது.
நிவேதாவிற்கு இது முதல் தெலுங்கு படம் தான் இருந்தும் குறிப்பிடும் படியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இடைவேளை காட்சியை கட்சிதமாக வடிவமைத்த இயக்குனர் இரண்டாம் பாதியை வேகமாகவே எடுத்திருக்கிறார். நிஜமாகவே ஒரு வித பரபரப்பு ஒட்டிக்கொள்வது இரண்டாம் பாதியில் தான்.
படத்தின் நீளம் தான் பெரும் பலவீனம். இந்த வகை த்ரில்லர் படத்தின் நீளம் சற்று குறைவாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும் இரண்டாம் பாதியில் வரும் பாடலையும் தவிர்த்திருக்கலாம். இரண்டு ஜோடிகளின் காதல் கதைகளை சொல்ல அதிக நேரம் எடுத்துகொண்டிருக்கின்றார் இயக்குனர்,
மணி சர்மாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக ஒலிக்கிறது. இயக்குனர் மோக கிருஷ்ணா எடுத்துக்கொண்ட த்ரில்லர் கதையை இறுதிவரை அதன் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை அமைத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். மொத்தமாக பார்த்தால் ஜென்டில்மேன் ஒரு குறிப்பிடும் படியான் த்ரில்லர் படம்.
ஜென்டில்மேன் - சுவாரஸ்யமானவன்!