விமர்சனம்
----------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
சாதா கதைதான். ஆனால் தனுஷ் என்னும் நடிப்பு அசுரனால் ஸ்பெஷல் சாதா ஆகியிருக்கிறது!
தண்டச்சோறு, வெட்டிப்பையன் என்று வீட்டால் வெறுப்பேற்றப்படும் ஓர் இளைஞன், வாழ்க்கையில் இனம் புரியாமல் வரும் எல்லா எதிர்ப்பையும் காலி செய்து வி.ஐ.பி. ஆகும் படம். இயக்கம் வேல்ராஜ்.
சமீப காலங்களில் தமிழில் ஹிட் தள்ளிக்கொண்டே போன தனுஷ் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் கமல் என்று ஸ்டைலும், பாவமும் சேர்ந்து களை கட்டுகிறார். ஏக்கம், கோபம், இயலாமை என்று அத்தனையும் அசால்ட்டாய் வருகிறது. மூச்சு விடாமல் பேசுவது ரகளை. அவருடன் சேர்ந்ததால் அந்த மோஃபாவும் நன்கு நடிக்கிறது.
அமலாபால் அடக்க ஒடுக்கம். திருமதி ஆயிட்டாங்க பாஸ்!
சுரபி என்னும் அழகு தேவதையை இன்னும் கொஞ்சம் உபயோகப்படுத்தியிருக்கலாம்.
சரண்யா வழக்கம் போல அம்மா கொடியை பலமாகப் பறக்க வைக்கிறார். சமுத்திரக்கனியும் ஓகே.
சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் தனுஷ், அனிருத் என்று இரண்டு ஒல்லிப்பிச்சான்களும் இணைந்து கில்லி அடித்திருக்கிறார்கள்.
லைட்டான வசனம் அங்கங்கே டச் பண்ணுகிறது.
பெரிய திருப்பம் எதுவும் இல்லாததும், எல்லாக் காட்சிகளையும் சுலபமாக யூகிக்க முடிவதும் மைனஸ்.
வே.ப. - பிரமோஷன்
குமுதம் ரேட்டிங் - நன்று





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!