Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆபாச பட வழக்கில் சிக்கிய கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய ஷில்பா ஷெட்டி முடிவு?

01 செப், 2021 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Shilpashetty-decides-to-split-from-Rajkundra

இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இந்தியில் முன்னணி நடிகர்களுடன் எராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ, விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார். இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ராஜ் குந்திராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அவர் மனம் உடைந்து கணவரை கண்டித்து கண்ணீர்விட்டு அழுததாக கூறப்பட்டது. கணவர் மீதுள்ள கோபத்தில் சிறையில் சென்று அவரை பார்க்காமல் ஒதுக்கி விட்டதாகவும் பேசுகிறார்கள். ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி குடும்ப மானமே போய்விட்டது என்றும் என்ன குறைச்சலாக இருக்கிறது என்றும் இப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டும் கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுததாகவும் தகவல் வெளியானது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தில் உடன் சென்ற போலீசார் தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னரே ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறு செய்து விட்டதாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, “தவறுகள் செய்யாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்ற வாசகத்தையும் வெளியிட்டு இருக்கிறார். ராஜ்குந்த்ராவை திருமணம் செய்ததைத்தான் தவறு செய்துவிட்டேன் என்று ஷில்பா ஷெட்டி சொல்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

கணவர் கைது செய்யப்பட்டதால் மன வேதனையில் இருந்த ஷில்பா ஷெட்டி கடந்த 3 வாரங்களாக தான் பங்கேற்ற சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த படங்களையும் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ராஜ் குந்த்ராவின் பிரச்சனை இப்போது தீராது. வாரா வாராம் இந்த விவகாரம் பெரிதாகி கொண்டேதான் செல்வதால் ஷில்பா ஷெட்டி தனது கணவர் செய்த தவறுகள் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்திலும் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவருடைய நண்பர் கூறியுள்ளார். 40 வயதைத் தாண்டிய ஷில்பா ஷெட்டி இன்னமும் இளம் நடிகைகளுக்கு போட்டி தரும் வகையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எனவே மீண்டும் நடிப்பில் பிசியாக திட்டமிட்டு அதற்காக சில நண்பர்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டாவது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேஇரண்டாவது ஹாலிவுட் படத்தில் ... மலையேற்ற சாதனையை சோனு சூட்டுக்கு அர்ப்பணித்த வீரர் மலையேற்ற சாதனையை சோனு சூட்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Manian - Chennai,ஈரான்
02 செப், 2021 - 04:11 Report Abuse
Manian கேட்டது கிடைத்தப்புறமாலே, எப்படி கெடைச்சுதுன்னு கேக்கலாமா?
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
01 செப், 2021 - 20:49 Report Abuse
Natchimuthu Chithiraisamy கணவர் செய்த செயல் பல வருடம் நடந்திருக்கும் அது நடிகைக்கு தெரிந்திருக்கும். இப்பொழுது விலகுவது பலவகையான குற்றங்களை மறைக்கவே தவிர உண்மை விலகல் அல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in