டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' |

கடந்த நவம்பர் மாதம் பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2' படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'ஓய் ஓய்' என்கிற பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் திருமூர்த்தி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் இந்த பாடல் தாங்கள் தயாரித்த 'திரிதேவ்' என்கிற படத்தில் இடம்பெற்ற திர்ச்சி டோப்பி வாலா பாடலில் பயன்படுத்தப்பட்ட இசையை அனுமதி இன்றி காப்பி அடித்து 'துரந்தர் 2' பாடலில் பயன்படுத்தியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த பிரச்சனையில் பணம் பின்னணியில் இருப்பதால். இரு தரப்பினரும் தங்களது ராயல்ட்டி மற்றும் இழப்பீடு குறித்த விஷயங்களை சமரச தீர்வு மையம் (மீடியேசன்) மூலமாக தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த பிரச்சனையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஒரு மூத்த மீடியேட்டர் ஒருவரையும் நீதிமன்றம் நியமித்துள்ளது.