மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பூத் பங்களா' திரைப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அக்ஷய் குமார் அணிந்து வந்திருந்த சட்டைதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் அக்ஷய் குமார் கிட்டத்தட்ட கிழிந்து போன கந்தலாடையை அணிந்து வந்தது போல அதே சமயம் இன்றைய ஜென்சி இளைஞர்கள் அணிந்து கொள்வது போலவும் வித்தியாசமான ஒரு சட்டையை அணிந்து வந்திருந்தார்.
ரசிகர்களின் கவனத்தை வான்டடாக இருக்கும் விதமாக அக்ஷய் குமார் அணிந்து வந்திருந்த இந்த சட்டை குறித்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் கூட கடைசியில் ஒரு நல்ல சட்டையை வாங்க முடியவில்லை பார்த்தீர்களா என்று கூறியுள்ளார். எப்படியோ இந்த புரமோஷன் நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என நினைத்த அக்ஷய் குமாரின் எண்ணம் ஈடேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.