நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு |

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடந்த 2002ல் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான கம்பெனி என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக மாறினார். இதே கம்பெனி படத்தில் நடித்ததன் மூலம் தான் நடிகர் மோகன்லாலும் முதல் முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து 2019ல் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி லூசிபர் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க அதில் வில்லனாக நடித்திருந்தார் விவேக் ஓபராய். இந்த படம் தான் இவருக்கு மலையாள திரை உலகில் முதல் படமாக அமைந்தது.
முதல் பாகத்தில் இவரது கதாபாத்திரம் இறந்து விடுவதால், விரைவில் வெளியாக இருக்கும் இதன் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் இவருக்கு வேலை இல்லை. அதே சமயம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், லூசிபர் படத்தில் நடித்தது குறித்து கூறும்போது, “மோகன்லால் என்னை அழைத்து பாலிவுட்டில் நீங்கள் அறிமுகமான முதல் படத்தில் என்னுடன் இணைந்து நடித்தீர்கள். அதேபோல மலையாளத்திலும் என்னுடைய படத்தில்தான் நீங்கள் அறிமுகமாக வேண்டும். பிரித்விராஜ் இயக்குகின்ற இந்த படத்தில் உங்களுக்கு அற்புதமான கதாபாத்திரம் இருக்கிறது என்று எனக்கு ஒரு அன்புக்கட்டளையே போட்டுவிட்டார். அதை என்னால் மீற முடியவில்லை..
ஆனால் அந்த படம் வெளியான பிறகு தற்போது பல ஊர்களுக்கு செல்லும்போதும் என்னை அந்த படத்தில் நடித்த பேபி கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி தான் அழைக்கிறார்கள். அப்படி அழைப்பவர்கள் மலையாளிகள் என்பதை புரிந்து கொண்டு, உடனே அவர்களிடம் எந்தா சுகந்தன்னே என்று மலையாளத்தில் கேட்டு சந்தோஷப்பட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.