நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

பொதுவாக திரையுலகில் ஹீரோயினுக்கு தோழி, ஹீரோவின் தங்கை என்று அறிமுகம் ஆன பிறகு தான் ஹீரோயின் ஆக முடியும். ஆனால் சிலருக்கு ஆரம்பமே ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றவர் தேஜூ அஸ்வினி. இவரது இன்ஸ்டாகிராம் போஸ்டுக்காக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இவர் கிளாமர் போட்டோ சூட்களை பதிவிட்டதும் இளசுகள் ஹாட்டின்களை தெறிக்க விடுகின்றனர்.
தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது : என் பூர்வீகம் ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே ஒரு கிராமம். சென்னைக்கு சிறுவயதிலே குடிபெயர்ந்தோம். அப்பா தெலுங்கு சினிமாவில் இசைக்கலைஞர். நான் பள்ளி, கல்லுாரி படித்தது சென்னையில் தான். எம்.ஏ., படித்துள்ளேன். பள்ளி பருவத்திலிருந்தே நடனம் ஆடுவதை விருப்பமாக வைத்திருந்தேன். பேட்மிட்டன், த்ரோபால், கோகோ, ஹாக்கி விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளேன்.

2018ல் முதல் முதலாக 'கல்யாண சமையல் சாதம்' வெப்சீரிசில் நடித்தேன். அது கொரோனா காலத்தில் ஹிட்டானது. வைரலும் ஆனேன். ஒவ்வொருவரும் என்னை அடையாளம் காண ஆரம்பித்தனர். அப்பா, அம்மா, அக்கா என எல்லாரும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். அதன்பிறகு 'அஸ்குமாரோ' ஆல்பம் பாடலில் நடித்தேன். அதுவும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து திரைப்படத்தில் வாய்ப்பு, அதுவும் ஹீரோயினாக!
குக்குவித் கோமாளி அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. என் முழு திறமையை காட்டினேன். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சானது. 2வது படமாக ஜி.வி.பிரகாஷ் உடன் 'பிளாக் மெயில்' படத்தில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறேன். அடுத்து 'மூன்றாம் கண்' எனும் படம் முடிந்து இன்னும் வெளிவரவில்லை. இதிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதிக வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை. சினிமாவுக்கு நான் புதிது என்பதால் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.