நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... இளசுகளிடம் இவரது மவுசை!
ப்ரீத்தா கூறியதாவது: சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அப்பா, அம்மாவிற்கு நான் ஒரே பொண்ணு. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எட்டாக்கனியாக இருந்தது. என் குரலை என்னுடன் இருப்பவர்கள் கேலி செய்வார்கள்; எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பேன். ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லுாரிக்கு சென்றபோது என்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். என்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளினேன். படிப்படியாக என் திறமையை வளர்த்துக்கொண்டேன்.
சினிமாவில் ஹீரோயினாக ஆசை இருந்தது. ஒரு யுடியூப் சேனலிலிருந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் ஆர்வமாக நடித்தேன். ஆனால் படம் வெளியே வந்தபிறகு நான் நடித்த காட்சிகள் இடம் பெறவில்லை.
அடுத்து குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை நழுவ விடாமல் 120க்கு மேலான குறும்படங்களில் நடித்தேன். நடிப்பு பழக நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து அப்படியே வெப்சீரிஸ் பக்கம் வந்தேன். கண்மணி அன்போடு காதலன், கதைப்போமா, ஆயிரம் ஜன்னல் வீடு போன்ற வெப்சீரிஸ்களில் நடித்தேன். அதில் கதைப்போமா வெப்சீரிஸ் மூலம் என் முகமும் ரசிகர்கள் மத்தியில் பதிய துவங்கியது.
நெகட்டிவ் எனக்கருதிய என் குரல் பாசிட்டிவாக மாற ஆரம்பித்தது. பெற்றோர் ஒத்துழைப்பில் திறமையை காட்ட ஆரம்பித்தேன். என் ஆசை சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் வாங்க வேண்டும் என்பது தான். அதுவும் நடக்க போகிறது.
தற்போது 3 படங்களில் 'கமிட் ஆகி' உள்ளேன். ஒரு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரோடு நடித்திருக்கிறேன். சீரியல்களிலும் வாய்ப்புகள் வருகிறது. இருந்தபோதிலும் திரைப்படங்களில் நடிப்பதை தான் விரும்புகிறேன். அதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன். எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக, நேர்த்தியாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை தாரக மந்திரமாக வைத்திருக்கிறேன் என்றார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்திருப்பவர் சென்னையை சேர்ந்த ப்ரீத்தா. 'திரைப்பட ஹீரோயின் ஆக ஆசைப்பட்டேன். குறும்பட நடிகையாக சாதித்து இன்று திரைத்துறையில் நுழைந்திருக்கிறேன். இங்கும் வெல்வேன்' என்கிறார் ப்ரீத்தா.