நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
'திருஷ்டி பூசணிக்காயை இப்படி ரோட்டுல உடைக்கலாமா... ஏதாவது பைக் வழுக்குச்சுன்னா, ஒரு குடும்பம் சிதைஞ்சிருமே...' - சென்னை சாலிகிராமத்தில் அக்கறையாய் கேள்வி கேட்கிறார் ருக்மணி பாபு! 'டப்பிங்' கலைஞர், ஒப்பனை உதவியாளர், துணை நடிகர் என திரைத்துறையில் 28 கால அனுபவம்; தனக்கு நல்ல அங்கீகாரம் பெற்றுத்தரும் என, உறாங்குட்டான் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.d
இந்த சமூக அக்கறைக்கு என்ன காரணம் பாபு?
உடைச்ச 'திருஷ்டி' பூசணிக்காய் வழுக்கி, 2019ம் ஆண்டுல என் மகன் சந்திச்ச விபத்து; தாடையில காயம், கை எலும்பு முறிஞ்சு போச்சு; அப்போ இருந்து இந்த அறிவுரையை சொல்லிட்டு இருக்குறேன்!
'முரட்டு தோற்றம்' - கை கொடுத்திருக்கா?
எங்கே... கலை நிகழ்ச்சிக்காக இலங்கை விமான நிலையத்துல இறங்கினதும் சந்தேகப்பட்டாங்க! இரவுநேர வாகன சோதனையில 'மிமிக்ரி' பண்ணி என்னை நிரூபிக்க வேண்டியிருக்கு! இயக்குனர் பாலா பட வாய்ப்பு நழுவிருச்சு!
'சினிமா'ன்னா அவ்வளவு இஷ்டமா?
'நடிகன்' ஆகுற கனவுல சென்னைக்கு வந்த நான் அம்மா கூப்பிட்டதும் உடனே திரும்பிட்டேன். என் கனவை புரிஞ்சுக்கிட்ட அம்மா மறுபடியும் சென்னைக்கு அனுப்பி வைச்சாங்க! 'அம்மா'ன்னா அவ்வளவு இஷ்டம்... அதனாலதான், நான் 'ருக்மணி' பாபு!
உங்க பலவீனம்?
எல்லாரையும் நம்பிடுவேன். 'படம் பாதியில நிற்குது'ன்னு சொன்னவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துட்டு, 'நம்மளால நல்லது நடக்கப் போகுது'ன்னு நம்பியிருக்கேன்! நடிச்சு கொடுத்த படத்துக்கு ஊதியம் தராதப்போ கை பிசைஞ்சு நின்னுருக்கேன்!
உங்க திறமையை உரசிப் பார்த்த அனுபவம்?
கோவை பேருந்து நிலையத்துல உடல்நலமில்லா மனிதனா நடிச்சிருக்கேன்; பரிதாபப்பட்ட ஒருத்தர் எனக்கு தர்மம் பண்ணினார்; 'கலைத்திறமைக்கான வெகுமதி'ன்னு அவர் தந்த ரூபாயை ப்ரேம் போட்டு இன்னும் வைச்சிருக்கேன்.