பல இரவுகள் தூங்காமல் இருந்தேன்....'டிரோல்கள்' குறித்து விஜய் தேவரகொண்டா | 'பகவந்த் கேசரி' மீது விஜய்க்கு ஒரு நம்பிக்கை: இயக்குனர் அனில் ரவிப்புடி | ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன் | ஹிந்தியில் ஓப்பனிங்கிலேயே சரிவடைந்த பிரபாஸின் 'தி ராஜா சாப்' வசூல்! | பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் பிச்சைக்காரனாக விஜய் சேதுபதி! | 'பராசக்தி, தி ராஜா சாப்' படங்களின் வசூல் விவரம்! | 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி- 3 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்! | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ | சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? |

படம் : தம்பி
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : மாதவன், பூஜா, வடிவேலு, இளவரசு
இயக்குனர் : சீமான்
தயாரிப்பு : டாக்டர் முரளி மனோகர்
'உபதேசம் பண்ணா எவன் கேக்கிறான்? உதைச்சாத் தான் கேக்கிறான்' என, விழிகளை உருட்டியபடியே மாதவன் மிரட்டிய படம், தம்பி. கடந்த, 1996ல், பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும், 2006ல் வெளியான, தம்பி படத்தின் வழியாகவே, அதிக கவனம் பெற்றார், சீமான்.
தமிழ் சினிமாவின், 'சாக்லேட் பாய்' நாயகனாக இருந்த மாதவன், ரன் படத்தின் மூலம் ஆக் ஷன் பாதைக்கு திரும்பினாலும், முழுமையான அதிரடி நாயகனாக மாறியது, தம்பி படத்தில் தான். இப்படத்தில், கண்களை இமைக்காமல் நடித்தார்!
தமிழ் நடிகர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க முன்வராததால், மாதவன் நடித்தார். 'என்ன நடக்குது இங்கே?' என, மாதவன் கேட்கும்போதெல்லாம், நமக்கும் சூடு பரவுகிறது. படத்தின் பலமே, வசனங்கள் தான். 'இங்கே, 'சைலன்ஸ்' என்பதையே, சத்தமாகத் தானே கூற வேண்டி உள்ளது. ஆயுதம் வாங்குற பணத்திற்கு அரிசி வாங்கியிருந்தால், இவ்வுலகத்தில் பசி இருந்திருக்காது...' உள்ளிட்ட வசனங்கள் கைத்தட்டல் பெற்றன.
படத்தில், பெரும்பாலும் ஆங்கில கலப்பின்றி, தமிழில் வசனம் இடம் பெற்றிருந்ததும், பாராட்டுகளை பெற்றது. தன் குடும்பத்தை அழித்த ரவுடிகளை பழிக்கு பழி வாங்காமல், அவர்களை திருத்த, அடிதடியை கையில் எடுக்கும் கதாநாயகன். இது தான், கதை.
மலையாள நடிகர் பிஜு மேனன் வில்லனாக நடித்திருந்தார். பாடல்களிலும் சமூகக் கருத்துகள் பரவியிருந்தன. 'சுடும் நிலவு, பூவனத்தில், என்னம்மா தேவி ஜக்கம்மா...' பாடல்கள் ரசிக்க வைத்தன. கார்த்தி நடிப்பில், தம்பி என்ற பெயரில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது; தமிழில் தலைப்புக்கும் பஞ்சமா?
பேரன்பும், பெருங்கோபமும் உடையவன், சீமானின் தம்பி!




