மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

டிவி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று 'சந்திரலேகா'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே வேறு எந்த சீரியலும் தொடாத அளவிற்கு 2000 எபிசோடுகளை கடந்து இமாலய சாதனையும் படைத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் கதையின் நாயகிகள் இண்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளனர்.
சந்திரலேகா தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா மற்றும் ராணி ஆகிய நடிகைகள் தான் மெயின் கதாபாத்திரங்களில் நடித்து கதையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரலேகா தொடர் 2000 எபிசோடுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் நால்வரும் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனில் இன்னும் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். ஒருபுறம் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தான் என்றாலும் கதையை எப்பதான் முடிப்பீங்க என கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.