மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

சர்வதேச புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிக்கு வருவது புதிதல்ல. கோன் பனைகா குரோர்பதி, பிக் பாஸ், சேலன்ஞ், சூப்பர் டேலண்ட் என பல நிகழ்ச்சிகள் வெளிநாட்டில் இருந்து இங்கு இறக்குமதி ஆகியுள்ளது. சமீபத்திய வரவாக மாஸ்டர் செப் நிகழ்ச்சி வந்துள்ளது.
இந்த வரிசையில் அடுத்து வருகிறது சர்வைவர். இருக்கிற நிகழ்ச்சிகளிலேயே இதுதான் ஆபத்தானது. இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் முன்பே கசிந்திருந்தாலும், இப்போதுதான் சேனல் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தி அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம்: பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கிற மாதிரி இது காட்டுக்குள் நடக்கிற போட்டி. இதில் கலந்து கொள்கிறவர்களை ஒரு தீவில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் இறக்கி விட்டு விடுவார்கள். அந்த அடர்ந்த காட்டுக்குள் யார் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து நிற்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். எலிமினேட் ஆகிறவர்களை ஹெலிகாப்படரில் வந்து அழைத்து போய்விடுவார்கள்
15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். உணவு, தண்ணீர், தங்குமிடம் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் போட்டியாளர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகள் கொடுக்கப்படும். அதிலும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உடல் பரிசோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.