ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் நாயகி கதாபாத்திரத்தில் அறிமுகாமானார் ரேஷ்மா. இவர் அதே சீரியலில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று மதனும் ரேஷ்மாவும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். ஆறு மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் அறிவித்திருந்தனர். ஆனால், கோவிட் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், புதிய சீரியல் ஒன்றில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் நாயகனாக மதனும், நாயகியாக ரேஷ்மாவும் நடிக்கின்றனர்.
காதலை வெளியுலகிற்கு அறிவித்த பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் சீரியல் இதுதான். ரியலிலும் திரையிலும் ஜோடி சேர்ந்துள்ள மதன் ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.