காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனாலும், வெளியே அவருக்கு பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பிரதீப்பின் ஆதரவாளர்கள் வனிதா விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனிதாவும் பிரதீப்பும் பேசிக்கொண்டு சமாதானம் ஆகிவிட்ட வாட்சப் உரையாடலும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் வனிதாவுக்கு தன்னால் அனுதாபம் காட்ட முடியவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'அடித்தவர் யாரோ அதற்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் ரிவியூவால் வந்த வினை. வனிதாவின் ருசிகரமான பொய்கள் யு-டியூப்புக்கும் விஜய் டிவிக்கும் வேண்டுமானல் கண்டண்டாக பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா?. நான் இதற்கு அனுதாபம் காட்ட வேண்டும். ஆனால், சனியன் இந்த நேரம் பார்த்து மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற போது வனிதாவும் அவரை சார்ந்தவர்களும் மதுமிதாவை சுற்றிவளைத்தது ஞாபகம் வருகிறது. இது வெறும் விளையாட்டு என்பது அப்போது ஞாபகத்து வரவில்லையா? உங்களுக்கென்று இல்லை யாருக்குமே வன்முறை நடக்கக்கூடாது ' என்று பதிவிட்டுள்ளார்.